Friday, March 18, 2011

ஆர்கிமிடிஸ் - 04

0
ஆர்கிமிடிஸ் - 04

           ஆர்கிமிடிசின் தாய் நாடான சிசிலி தீவிற்கு ரோமேனியர்கள் சுற்றி வளைத்து போர் தொடுப்பதற்கு தயாராக இருப்பதனால் சிசிலி தீவின் அரசர் ஆர்கிமிடிஸ் இற்கு அழைப்பு விடுத்து ரானுவா பொறியியலாளராக பொறுப்பேற்குமாறு கூறியிருந்தார். ஆர்கிமிடிசும் உடனே சிசிலி தீவிற்கு திரும்பினார்.




              நாட்டை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும் பொறுப்பை அவர் உடனே ஏற்றுக்கொண்டார். கவன வைத்து கல் எரிவதை போல பேரும் பாறைகளை தூக்கி வீசும் கவன்களை அவர் உருவாக்கினார். அதே போல் கப்பலின் பாய்மர உச்சியை பிடித்து இழுத்து கப்பலையே கவிழ்க்கும் எரிகொளுவிகளை தங்களுடைய துறை முகத்தில் தொங்கவிட்டார். மிகப்பெரிய லென்சு கண்ணாடிகளை வைத்து சூரிய ஒளியை எதிரி கப்பல்களின் மீது பாய்ச்சி தீப்பற்ற செய்தார். ரோமேனிய கப்பல்களின் மீது பாறைகளை எந்திர கவண்கள் எறிந்து நொறுக்கின. எரிகொளுவிகள் கப்பல்களை கவிழ்த்தன. லென்சுகள் பாய்மரங்களை தீக்கிரையாக்கின. ரோமேனிய கடற்படை பெரும் சேதத்துடன் தோற்று ஓடியது. ஆர்கிமிடிசின் விஞ்ஞான கண்டுபிடிப்பினால் ரோமேனியர்கள் மிரண்டு போயினர்.



              பின்பு ரோமேனியர்கள் சிசிலிதீவின் நாளா பக்கமும் சுற்றி வளைத்து மாதகனகில் முற்றுகையிட்டனர். இதனால் சிசிலி தீவின் மக்கள் உணவின்றி பட்டினி கிடக்க நேரிட்டது. வேறு வழியின்றி சிசிலி ரோமேனியர்களிடம் சரணடைந்தது. ரோமேனிய படை சிசிலிதீவிற்குள் புகுந்தது.
               


ஆயினும் ரோமேனிய படை தலைவர் விஞ்ஞானியான ஆர்கிமிடிசுக்கு எந்த ஒரு தீங்கும் செய்யக் கூடாதென தனது படைகளுக்கு ஆணை இட்டிருந்தார்.




அடுத்தபதிவு ஒரு துக்கமான பதிவு .....................................
காத்திருங்கள்..............................................................................
உங்கள் 

Thursday, March 17, 2011

ஆர்கிமிடிஸ் - 03

0
ஆர்கிமிடிஸ் - 03 

           ஆர்கிமிடிசின் அடுத்த கண்டுபிடிப்பு தான் நெம்பு கோல். ஒரு நீண்ட கோலின் ஒரு நுனியை பிடித்துக்கொண்டு ஒரு சிறுவன் நிற்கிறான் . ஒரு பெரிய ஆள் தஊக்க முடியாத பளுமிகுந்த ஒரு பொருளை கோலின் மற்றொரு நுனியால் தூக்கிட முடியும் .


           அந்தசிறுவன் பயன்படுத்தும் கோல்தான் நெம்பு கோல் ஆகும் .ஒரு நுனியில் செலுத்தப்படும் விசையால் மறுநுனியில் உள்ள பொருளை நகர்த்த முடியும் . "அதிக நீளமான நெம்புகோல் ஒன்றை என்னிடம் கொடுத்து, நான் நிற்பதற்கு ஓர் இடமும் கொடுத்து விட்டால் மிகப்பெரிய நமது பூமியை கூட என்னால் நகர்த்தி விட முடியும்" என்றார் ஆர்கிமிடிஸ் .
            ஆர்கிமிடிஸ் போன்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த விஞ்ஞானிகள் பல்துறை அறிஞர்களாகவும் திகழ்ந்தனர் . பாலம் கட்டவும் , கோவில் கட்டவும் போருக்கு தேவையான படிக்கலாம் ஒன்றை தயாரிக்கவும் , குழந்தைகள் விளையாடும் சாமான்களை செய்யவும் கூட அக்காலத்தில் அரசர்கள் விஞ்ஞானிகளை அழைத்தனர் .


              வயதான காலத்திலும் ஆர்கிமிடிஸ் அலேக்சன்றியாவில் ஆராய்சிகளை செய்வதும், மாணவர்களுக்கு போதிப்பதுமாய் இருந்து வந்தார் . திடீரென ஒரு நாள் அவரது தாய் நாட்டு அரசரிடம் இருந்து அழைப்பு வந்தது .                  ஏன் ?...................................... 

அடுத்தபதிவு வரை காத்திருங்கள் ........................


உங்கள் 

Tuesday, March 15, 2011

ஆர்கிமிடிஸ் -02

0
ஆர்கிமிடிஸ் -02

ஆர்கிமிடிஸ் விடை காண தெரியாது சோர்வுற்று குளிப்பதற்கு தொட்டியில் நீரை நிரப்பி குளிக்க இறங்கினார் . அவர் தண்ணீர் தொட்டியில் இறங்கியதும் தண்ணீர் வெளியே வந்தது . அதை கவனித்து பார்த்த அவர் எதையோ கண்டுபிடித்து விட்டதாக கதவை திறந்து "யுரேக்கா ,யுரேக்கா " என கத்திக்கொண்டு வெளியில் நிர்வாணமாய் ஓடினார் .


அதாவது அவர் குளிப்பதற்கு நீர் தொட்டியில் இறங்கியதும் அதிலிருந்து வெளியேறிய நீர் தான் அதற்கு காரணம். அந் நீர் அவருக்கு ஒரு விடையை காட்டியது . அதாவது நீரில் இடப்பட்ட ஒவ்வொரு பொருளும் எவ்வளவு நீரை வெளித்தள்ளுகிறது என்பதை பொறுத்து அதன் விடையை காணலாம் . நீரின் ஏடையை விட குறைந்த எடை உள்ளதாக இருந்தால் அப்பொருள் மிதக்கும் . நீரின் எடையை விட அதிகமாய் இருந்தால் அந்தப்பொருளின் எடை அதிகமாய் இருந்தால் அது மூழ்கிவிடும் என்றார் ஆர்கிமிடிஸ் . 

அதற்கு உதாரணமாய் அவர் படகினை சுட்டி காட்டினார் .மிக பளுவான பொருட்களினால் கட்டப்பட்டிருக்கும் படகு நீரில் மிதக்கிறது .மொத்த நீரின் எடையை விட படகின் எடை குறைவாக இருப்பதே மிதப்பிற்கு காரணம் என்று ஆர்கிமிடிஸ் கூறினார் .

ஒரு சிறிய பாத்திரத்தில் நீரை நிரப்பி சுத்தமான தங்கத்தில் செய்த கிரீடத்தை அதில் போட்டால் குறித்த அளவான நீர் வெளியேறும் .அதே போல் சுத்த வெள்ளியால் செய்த கிரீடத்தை நீரில் போட்டால் குறித்த அளவான நீர் வெளியேறும் இரண்டிலும் ஏற்படும் வித்தியாசத்தை ஆதாரமாய் வைத்து அரசரின் கிரீடத்தில் வெள்ளி கலந்திருக்கிறதா என அறியமுடியும் என ஆர்கிமிடிஸ் கூறினார் . ஆர்கிமிடிசின் இந்த கண்டுபிடிப்பு எதிர் காலத்தில் பல கண்டுபிடிப்புகளுக்கு திறவு கோலாக இருந்தது . 

ஆம் அடுத்த பதிவு திறவு கோல் திறந்தது எதை என பார்க்கலாம் ......
உங்கள் 

Sunday, March 13, 2011

ஆர்கிமிடிஸ் -01

0
அனைவருக்கும் வணக்கம் !

இந்த வலை பூ உலகின் கடந்தகால நிகழ்வுகளையும் , விஞ்ஞானிகளையும்  பற்றி அலசி ஆராய உள்ளது .
அத்துடன் பதிவுகளுக்கு வாக்களித்து செல்லுங்கள் ............

இன்றைய முதல் பதிவு 2000 ஆண்டுக்கு முன் உலகில் வாழ்ந்த விஞ்ஞானி ...
ஆர்கிமிடிஸ் தொடர்பானது ..

ஆர்கிமிடிஸ் 


                            இவர் கிரேக்கத்தில் 2000 ம் ஆண்டுகளுக்கு முன்பு சிசிலித்தீவில் பிறந்தவர் . எகிப்தில் உள்ள அலெக்ஸ்சண்ட்ரியா பல்கலைகழகத்தில் கல்வி கற்றார் . கணிதம் மற்றும் தேற்றங்களையும் மணலில் எழுதி பார்த்து விடை கூறுவார் . அதனால் இவருக்கு மணல் கணக்காளர் என்று பெயரிட்டனர் .
                            
                             நைல் நதிக்கரையோரங்களில் விவசாயம் செய்து வந்த விவசாயிகளுக்கு ஒரு நீண்ட கால பிரச்சினை இருந்தது . மேட்டு நிலங்களுக்கு நீர் ஏறிப் பாய்வதில் சிக்கல் இருந்தது . ஆர்கிமிடிஸ் ஒரு பெரிய குழாயினுள் திருகு ஒன்றை மாட்டி அக் குழாயை  நீரில் அமிழ்த்தினார் . பின்பு திருகை சுழற்றினார் . ஆற்று நீர் குழாய் வழியே மேலேறி மேட்டு நிலங்களுக்கு பாய துவங்கியது .இக் கண்டுபிடிப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது .



மேல் உள்ள காணொளி சிறந்த முறையில் அதை விளக்குகிறது ....
                                  
                           இதை கேள்விப்பட்ட சிசிலித்தீவின் அரசர் ஆர்சிமிடிசை நாடு திரும்பச் செய்து அவரை விஞ்ஞான அமைச்சராக்கினார் .ஒரு நாள் அரசர் தனது கிரீடத்தை ஆர்கிமிடிசிடம் கொடுத்து "ஒரு இரத்தின வியாபாரியிடம் இதை விலை கொடுத்து வாங்கினேன் . இது சுத்த தங்கத்தால் செய்தது என்று சொல்கிறான் .இதில் வெள்ளியை கலப்படம் செய்திருப்பானோ என்று சந்தேகிக்கிறேன் .இதை எப்படியாவது நீங்கள் கண்டு பிடிக்க வேண்டும்"  என்று கேட்டுக் கொண்டார் .
      
                          ஆர்சிமிடிஸ் அந்த கிரீடத்தை கையில் வாங்கி அதை எடை நிறுத்து பார்த்தார் . பின்பு நெடு நேரம் யோசித்தும் அவருக்கு விடை கிடைக்கவில்லை .

ஆர்சிமிடிஸ் எவ்வாறு விடை பெற்றார் ...........
அடுத்த பாத்து வரை காத்திருங்கள் ......................
உங்கள் 




Related Posts Plugin for WordPress, Blogger...

varalaaru Headline Animator

AD 1